search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அழைப்பு"

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit
    புதுடெல்லி:

    சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று தெரிவித்திருந்தார்.
     
    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் அழைப்பை நாங்கள் ஏற்கப்போவதில்லை. நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப்போல் இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை. எனவே, பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.



    இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit 
    பாகிஸ்தானில் வரும் 28-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு மந்திரி விடுத்திருந்த அழைப்பை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நிராகரித்து விட்டார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும்.

    பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
     
    இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை தனிவழி அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய வசதிகளுடன் தனிவழியை ஏற்படுத்துமாறு வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.



    இதையேற்று, இந்த பாதைக்கான பணிகளின் தொடக்க விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார்.

    தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள சில நிகழ்ச்சிகளை காரணம்காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்து விட்டார். அதே நாளில் (28-ம் தேதி) தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் வசதியாகவும் விரைவாகவும் பாகிஸ்தானுக்கு சென்று குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப் ஆலயத்தை தரிசிக்க வழி வகிக்கும் இந்த பாதையின் தொடக்க விழாவுக்கு எங்கள் நாட்டின் சார்பில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அரசின் அழைப்பையேற்று அங்கு செல்ல அனுமதிகோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடிதம் அளித்துள்ளார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
    ×